×

சேதமான கட்டிடங்களில் இயங்கி வரும் குழந்தைகள் நல மையம்

மண்டபம்,பிப்,12: மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாகாச்சி, என்மனங்கொண்டான், இருமேனி, தாமரைக்குளம், புதுமடம், மானங்குடி, நொச்சியூரணி, பிரப்பன்வலசை, சாத்தக்கோன் வலசை,வேதாளை, மரைக்காயர்பட்டிணம் ஆகிய 11 ஊராட்சிகளும் மற்றும் மண்டபம் பேரூராட்சியும் ஒன்றாகும். இந்த பகுதிகளில் குழந்தைகள் நல மையம் இயங்கி வருகிறது. இந்த குழந்தைகள் மையம் இங்கி வரும் அங்கன்வாடி மற்றும் மகளிர் திட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகவும் பழமையானதாகும்.

ஆதலால் பல்வேறு கட்டிடங்கள் கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட மேல் கூரையில் மரச்செடிகள் வளர்ந்து அடர்த்தியாக உள்ளது. அதுபோல கட்டிடங்களுக்கு உட்பகுதியில் சிமெண்ட் பூசப்பட்ட பூச்சுக்கள் சேதமடைந்து கான்கிரிட் இரும்பு கம்பிகள் தெரியும் அளவுக்கு உள்ளது. இதனால் கட்டிடங்கள் உள்ளே அமர்ந்து படித்து வரும் குழந்தைகள் மேல் சிமெண்ட் பூச்சுக்கள் சேதமடைந்து விழுந்து காயம் மற்றும் உயிர்சேதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சில கட்டிடங்களில் சுவர்கள் விரிவடைந்தும், மேற்கூரைகள் மற்றும் கட்டிடத்தின் உள் பகுதிகளில் சிமெண்ட் பூச்சு சேதமடைந்து உள்ளது. சில கட்டிடங்களில் மேல் கூறைகளில் மரம்,செடிகள் வளர்ந்து உள்ளது. இதனால் குழந்தைகள் நல மையம் கட்டிடங்களை தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஆய்வு செய்து சேதம் அடைந்து பழமையான கட்டிடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல ஊராட்சி பகுதிகளில் இயங்கி வரும் குழந்தைகள் நல மையம் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. தற்காலிகமாக அந்த இடத்தில் பயின்று வரும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கருதி மாற்று இடத்திற்கு மாற்றம் செய்வதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சி பகுதிகளில் குழந்தைகள் நல மையம் இயங்கி வந்து சேதமடைந்த கட்டிடங்கள் ஏதேனும் இடிக்கப்பட்டு இருந்தால், அந்த இடத்தில் குழந்தையின் நல மையம் இயங்குவதற்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல சேதம் அடைந்த கட்டிடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இயங்கி வரும் குழந்தை நல மையத்தில் படித்து வரும் குழந்தைகளுக்கு மாற்று இடங்கள் தேர்வு செய்து குழந்தைகள் நல மையத்தை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சேதமான கட்டிடங்களில் இயங்கி வரும் குழந்தைகள் நல மையம் appeared first on Dinakaran.

Tags : welfare ,Mandapam ,Nagachi ,Enmanangondan ,Irumeni ,Thamaraikulam ,Pudumadam ,Manangudi ,Nochiyurani ,Prapanvalasai ,Chathakon Valasai ,Vedalai ,Maraikayarpattinam ,panchayats ,welfare center ,Dinakaran ,
× RELATED சென்னை கிண்டியில் அமைந்துள்ள...